இன்று (06) முதல் சாதாரண ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கத் தீர்மானித்துள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, அவர்கள் தமது உத்தியோகபூர்வ சீருடையை அணிய மறுத்துள்ளார்கள்.