ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா ஊடக அமையத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் அன்னாரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் தொடர்பான நினைவுப்பேருரையினை ஊடகவியலாளர் நடராசா ஜனகதீபன் நிகழ்த்தியிருந்தார்.
குறித்த நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.