வடக்கில் கடும் வறட்சி!

காலநிலை அனர்த்தினால் 10000  இற்கும்  அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கால நிலை அனர்த்ததினால் 3598 குடும்பங்களை  சேர்ந்த 10663 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அந்த மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அரைக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

சப்ரகமுவ  மாகாணத்திலுள்ள கேகாலை மாவட்டத்தில் இடி மின்னல் மற்றும் மண்சரிவு, மற்றும் உயர் காற்றழுத்தம் காரணமாக 83 குடும்பங்களை சேர்ந்த 381 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகள் முளுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் சப்பிரகமுவ மாகாணத்தை சேர்ந்த இரத்திபுரி மாவட்டத்தில் அதி கூடிய மழையினால் ஒரு குடும்பத்தை  சேர்ந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த இதே வேளை வடமாகாணம்  கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக 432 குடும்பங்களை சேர்ந்துள்ள 946 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் யாழ்ப்பாணத்தில்  2618 குடும்பங்களை சேர்ந்துள்ள 8000 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்  திருகோணமலை மாவட்டத்தில்  464 குடும்பங்களை சேர்ந்துள்ள  1334 பேர் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply