கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி…!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரங்கொடபாலுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம, நாரங்கொடபாலுவ பகுதியைச் சேர்ந்த 42 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது மனைவி நபரொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த நபர் இவரது வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபர் இவரைக்  கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரும் உயிரிழந்தவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *