மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம்…! தேசிய மக்கள் சக்தியினரால் யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகம்…!

நாட்டை கட்டியெழுப்புகின்ற தீர்வுக்காக மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் மக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம்(13)  முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *