என்னை கொலைசெய்ய ஆளும் கட்சியின் ராஜாங்க அமைச்சர் திட்டம்! சபையில் சாணக்கியன் பகிரங்கம்

 

என்னை கொலைசெய்வதற்கு சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன் தெரிவித்துள்ளார் 

அவர் தொடர்ந்து பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் 

என்னை கொலை செய்ய முயற்சிப்பதாக வெளிநாட்டு முகவர் ஒருவரினால் கண்டறியப்பட்டதாக கடந்த ஜீலை 20 அன்று செய்தி ஒன்று வந்துள்ளதை நான் உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன் 

தங்களிடம் ஒரு கடிதத்தை தந்துள்ளேன் அதனைப்போல பொலிஸ்மா அதிபரிடமும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளேன்

இலங்கை ஈ நியூஸ் என்ற ஒரு சஞ்கிகையில்  ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது 

என்னை கொலைசெய்வதற்கு ஒரு சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றதாக வெளிநாட்டு உளவுப்பிரிவினால் வெளிப்படுத்திக்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது

உண்மையில் ஆளும் கட்சியில் உள்ள ராஜாங்க அமைச்சர் ஒருவர் இதிலே தொடர்பு பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த ராஜாங்க அமைச்சர் கடந்த காலப்பகுதியில் கொலைக்குற்றச்சாட்டுக்களை கொண்டவர். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குற்றச்சாட்டுடன்  தொடர்பு கொண்டவர்.

இது தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் 

Leave a Reply