
கொவிட் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம் மக்களை கட்டாயத் தகனம் செய்தமைக்கு மன்னிப்புக் கோரி அமைச்சரவை தீர்மானம் எடுத்து தப்பித்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. அத்துடன், அந்த பலவந்த தகனம் என்கின்ற அரசியல் தீர்மானத்தை எடுத்தவர் யார் என்பதை வெளிப்படுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.




