
பங்களாதேஷில் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் அந்நாட்டின் வரலாற்றையே புரட்டிப்போட்டுள்ளன. வேலைவாய்ப்புகளில் நியாயமான இட ஒதுக்கீடு கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், எதிர்பாராத விதமாக பிரதமர் ஷேக் ஹஸீனாவையே நாட்டை விட்டு விரட்டியடிக்குமளவு வீரியம் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட 2022 இல் இலங்கையில் நடந்த அரகலயவுக்கும் இப்போது பங்களாதேஷில் நடக்கும் நிகழ்வுகளுக்குமிடையில் பெரியளவு வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை.





