
உயர்பீட கூட்டத்திற்கு போகாத அலிசாஹிர் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ஷெய்யத் அலிசாஹிர் மௌலானா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் கலந்துகொள்ளவிலை. எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை மேற்கொள்ளும் குறிப்பிட்ட கூட்டத்திற்கு வராத அவர் சொந்த ஊரில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டமையால் வர முடியாமல் போனதாக கூறியிருக்கிறார். எனினும், வார இறுதியில் மட்டக்களப்புக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட மற்றுமொரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார் அலிசாஹிர் […]





