திருமலை கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய பெருமளவான நண்டுகள்..!

திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இன்று (10) அதிகாலை முதல் இலட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரை இவ்வாறான சிகப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply