கையூட்டல் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 8 வருட சிறை

மணல் ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகன சாரதியிடம்  2,000 ரூபாய் கையூட்டல் பெற்றமை  உள்ளிட்ட  4 குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு 8 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் சந்தேகநபருக்கு 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply