
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோன்று செப்டம்பர் மாதம் இருபத்தொன்றில் நடைபெறுமானால் அந்தத் தேர்தலின் முடிவு இந்த நாட்டின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பைத் தவறவிட்டால் இலங்கை தொடர்ந்தும் இன்று அனுபவிக்கும் நெருக்கடிகளைவிடவும் மோசமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்படலாம்.





