
எதிர்பாராத திடீர் நிகழ்வுகள் வாழ்க்கைச் சக்கரத்தை மாற்றி விடுகின்றன. இந்நிகழ்வுகளும் அதனையொட்டிய வாழ்க்கை மாற்றங்களும் வாழ்க்கை பற்றிய புரிதலை மட்டுமன்றி இறை நியதியையும் உணர்த்தி நிற்கின்றன. தனது 4 ½ மாத குழந்தையின் நலனுக்காக பாடசாலை இடமாற்றமொன்றைப் பெற்றுக் கொள்ளச் சென்ற ஆசிரியையொருவர் அன்புக் குழந்தையை மட்டுமன்றி தனது அன்புத் தாயையும் பறிகொடுத்த பரிதாப சம்பவமொன்று கடந்த திங்கட்கிழமை கெலிஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.





