
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி சந்தியில் வைத்து ரீ 56 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், மெகஸின் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 43 வயதான மெளலவி ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ஆயுத விற்பனை சம்பவம் ஒன்று இருப்பது தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.





