
கொரோனா தொற்றுப் பரவலின் போது மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பில், அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அது தொடர்பில் பரிந்துரை செய்ததாக கூறப்படும் நிபுணர் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசார பொறுப்பாளர்களில் ஒருவரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.

