
ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் அண்மித்து வரும் நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பது பற்றி மக்கள் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு சாரார் ஏலவே தீர்மானங்களை எடுத்துள்ள போதிலும் கணிசமானோர் வேட்பாளர்களின் நகர்வுகளையும் தேர்தல் கள மாற்றங்களையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.