சமூக விஞ்ஞான ஆய்வு மையமும் மீனவ பிரதிநிதிகளும் இணைந்து யாழில் தேர்தல் பரப்புரை …!

தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில்  நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு சார்பான பரப்புரை கோப்பாய் தொகுதியில்  தீவிரமாக இடம் பெற்று வருகின்றது.

அந்தவகையில், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநரும், சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் தலைமையில் இடம்பெற்றுவரும் பரப்புரையில் வட மாகாண மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்தனர்.

 இன்று(05)  காலை முதல் பிற்பகல் 6 மணிவரை குறித்த பரப்புரை கோப்பாய் பகுதியிலும், வட்டுக்கோட்டை பகுதியிலும் இடம் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *