தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பேரணிகளில் கலந்து கொள்ள மாட்டார் என கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
மாத்தறையில் நடைபெற்ற பேரணியில் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அநுரவுக்கு உடல்நிலை சரியில்லை, கடந்த சில நாட்களாக அவர் சோர்வடைந்துள்ளார்.
எனவே, ஒரு நாளாவது ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும் ஜனாதிபதியான பின்னர் அநுரகுமார அதே இடத்தில் பேரணியை நடத்துவார் என ஆதரவாளர்களுக்கு டில்வின் சில்வா உறுதியளித்தார்.