மட்டக்களப்பு கல்முனை பிரதான வழித்தடத்தின் ஊடாக மட்டக்களப்பிருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் ரயர் வெடித்ததன் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் விபத்து தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.