ஜனாதிபதித் தேர்தல் நாளில் அவசரநிலைக்கு தயாராக இருக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று வெள்ளம், சூறாவளி அல்லது பிற திடீர் அனர்த்தங்கள் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஆயத்தங்களை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

படகுகள், பேக்ஹோக்கள் போன்றவற்றை தயார் செய்யுமாறு ஆணைக்குழு   அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், தேர்தல் தினத்தன்று ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தயார்படுத்துமாறு கடற்படை மற்றும் விமானப்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திடீர் அனர்த்தங்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மாவட்ட பேரிடர் குழுக்களுக்கு ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *