சிறுபான்மைச் சமூகத்தினர் சஜித்துக்கே அதிக ஆதரவு- கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் அதிகளவு ஆதரவு உள்ளமை கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

சுகாதார கொள்கைகள் நிறுவகம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் போது இது தெரியவந்துள்ளது.

இளைஞர்கள் மத்தியில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அதிகளவு ஆதரவு காணப்படுகின்றது. கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 53 வீதமானவர்கள் அநுரகுமாரவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இலங்கைத் தமிழர்களில் 55 வீதமானவர்களும், இந்திய வம்சாவளித் தமிழர்களில் 53 வீதமானவர்களும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

முஸ்லிம்களில் 71 வீதமானவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

60 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 43 வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வெளியி;ட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு தவிர ஏனைய மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் காணப்படுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *