எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் தாம் வெற்றி பெற்றால் எதிர்வரும் 22ஆம் திகதியே நாடாளுமன்றம் கலைக்கப்படும்.
தமது தரப்பினரின் ஒத்துழைப்புடன் இடைக்கால அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.