
எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், வங்குரோத்து நிலை காரணமாக நாடு தனது பொருளாதார வளத்தை இழந்த பின்னர், இலங்கையில் நடைபெறும் தேசிய மட்டத்திலான முதலாவது தேர்தலாகும். கடந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தல் நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.