
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி சிறையிலடைக்க சதி செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த இறுதி பாராளுமன்ற தினத்தன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான், நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இழந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரே அச்சதியின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.