தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மாநாடு – ஜனாதிபதி ரணில் பங்குபெற்றுகிறார்!

வடமாகாண தொழில் வல்லுநர்கள், வர்த்தகர்கள் மற்றும்  இளைஞர்கள் பங்குபெற்றும் மாநாடு நாளை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ். வலம்புரி நட்சத்திர விடுதியில் இடம்பெற உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தொழில் நிபுணர் பிரிவின் மாவட்ட இணைப்பாளர் ராஜாராம் புருஷோத்தமன் குரு தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் வல்லுனர்களுக்கான முதலாவது மாநாடாகக் கருதுகிறோம். 

இந்த நிகழ்வுக்கு நாட்டின் ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க குறித்த நிகழ்வில் பிரதமர் விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

ஆகவே குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்கள் மற்றும் அவிப்பிராயங்களை ஜனாதிபதியுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *