பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்

 

2025 பெப்ரவரிக்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதற்கான தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின் வலிமை ஆகியவற்றுடன், 2025 பெப்ரவரிக்குள் அனைத்து வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தமது எகஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *