ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் தேர்தல் பிரச்சார கூட்டம்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ‘ரணிலால் இயலும்’ என்ற தொனிப்பொருளில் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்றையதினம் கண்டியில்(15) இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அநுராத ஜயரத்ன, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தை, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.வேலுகுமார், மஹிந்தானந்த அளுத்கமகே, உதயன கிரிந்திகொட, குணதிலக்க ராஜபக்‌ஷ, முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *