கிளிநொச்சியில் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்- ஒருவர் கைது..!

கிளிநொச்சி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் மீது கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்றைய தினம்(16) கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம்(17) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *