வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த திருவிழா- ஒருவழிப் பாதை, நடைமுறையில்!

வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழாவின் 16 ம் திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழா நாளை பிற்பகல் இடம் பெறவுள்ள நிலையில் ஏற்படக் கூடிய. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பருத்தித்துறை போலீசார் ஒருவழிப் பாதையை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

ஆலய பகுதிக்கு நுழைவதற்கு பருத்தித்துறை மருதங்கேணி வீதியும், வெளியேறுவதற்கு மாவடி சந்தி ஊடக பருத்தித்துறை கொடிகாம் வீதியும் பயன்படுத்துவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவ காலங்களில் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரங்கள் போக்குவரத்து தாமதங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *