
நாம் ஆட்சிக்கு வந்தால் ரமழான், ஹஜ் பண்டிகைகளில் ஏதேனும் ஒன்று நிறுத்தப்படும் எனவும் ஐவேளைத்தொழுகை நிறுத்தப்படும் எனவும் தாடி வளர்க்க விடமாட்டோம் எனவும் கூறுகின்றனர். எதிர்க்கட்சியினருக்கு எம்மைப் பற்றி விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை. இவை அனைத்தும் அடிப்படையற்றவை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.