யாழ்பாணத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம் – குடும்பப்பெண் பலி!

யாழ்ப்பாணம் நீர்வேலி சந்திக்கு இருகில் உள்ள வீடு ஒன்றில் பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டதில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் 

வீட்டில் தனிமையில் இருந்த 65 வயதுடைய பெண் ஒருவரே மேற்படி உயிரிழந்துள்ளார்

இந்த வெடிப்பினால் வீட்டுக் கூடை பாரிய அளவில் சேதம் அடைந்துள்ளதுடன் வீட்டின் வெளியே எரிந்த நிலையில் இரண்டு சிலிண்டர்கள் வீசப்பட்டுள்ளன 

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அங்குள்ள மக்கள்  தெரிவிக்கின்றனர். 

இந்த பாரிய வெடிப்பு சம்பவம் தொடர்பில் மர்மமாக இருப்பதாக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சம்பவம் தொடர்பாக  பொலிசார் தீவுர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் இச் சம்பவத்தில் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *