வாக்கெடுப்பு நிலையத்தில் மதுபோதையில் அநாகரீகமாக செயற்பட்டவர் கைது!

 

ஹோமாகம பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் மதுபோதையில் அநாகரீகமாக செயற்பட்ட நபரொருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்கெடுப்பு நிலையத்திற்குள் மதுபோதையில் சென்ற நபரொருவர் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இடையூறு விளைவிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *