மன்னாரில் பொலிஸாரல் எச்சரிக்கப்படும் மக்கள்- முழுமையான ஊரடங்கு அமுல்!

நாடளாவிய ரீதியில் தேர்தலுக்கு பின்னரான பாதுகாப்புக்கு என ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் முழுமையா ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் உரிய அனுமதி இன்றி நடமாடும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர் வியாபார நிலையங்கள் முடப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட அதிரடிபடையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *