இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க இன்று (23) காலை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நான்கு பேர் கொண்ட அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், நாடாளுமன்றம் இன்று பெருமளவில் கலைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.