திலீபனின் நினைவு ஊர்தி வவுனியாவை அடைந்தது!!

தியாகி திலீபனின் நினைவு ஊர்தி வவுனியாவை இன்றைய தினம்  அடைந்த நிலையில் அஞ்சலிநிகழ்வு இடம்பெற்றது. 

வவுனியா நகரசபைக்கு முன்பாக அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத்தூபியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது திலீபனின் திருவுருவபடத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது, மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன், தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம், மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *