9 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்!

 

புதிய அரசாங்கத்தின் 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நியமனங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில், வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு புதிய ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநராக நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

Leave a Reply