
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தயார் செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற நிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்குத் தக்கவாறு முஸ்லிம் சமூகத்திலும் தகுதியான வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.