
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு சில நாட்கள் கடந்துவிட்டன. தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி காபந்து அரசை அமைத்து நாட்டை திறம்பட நிருவகித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது.