யாழில் வேட்புமனுக்களை கையளித்தது ஈ.பி.டி.பி!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்..

இன்று பிற்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் வீணைச் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *