இரைப்பை அழற்சிற்காக சிகிச்சை பெற்ற பெண் திடீர் மரணம்..!

சீதுவ விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரைப்பை அழற்சி  நோயினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் முதலாம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண்ணுக்கு பல ஊசிகள் போடப்பட்டதாகவும், அந்த ஊசி போட்டதன் காரணமாகவே மகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவரது பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தரம் குறைந்த மருந்துகள் தொடர்பில் காலங்காலமாக சந்தேகங்கள் எழுந்துள்ள போதிலும், சுகாதார அமைச்சும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துவதுடன், நடவடிக்கை எடுக்காமல் ஆட்களை மட்டும் இடமாற்றம் செய்வதன் மூலம் இந்த மருந்துகளின் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் முறையை மாற்ற வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *