பொதுத் தேர்தலில் மீண்டும் வரும் யானை சின்னம் – ஐ.தே.கவின் தீர்மானம்!

 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மற்றும் வன்னி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கியத் தேசியக் கட்சித் தலைமையிலான கூட்டணி எதிர்பார்த்துள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி, நுவரெலியா மற்றும் வன்னி மாவட்டங்களில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், 

இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எட்டுவதற்குக் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் ஐக்கியத் தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *