யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் 2024.07.01 ஆந் திகதி தொடக்கம் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.