வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள்!

2024 வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, விஞ்ஞானிகளான டேவிட் பேக்கர், ஜோன் ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இந்த விருதினை கூட்டாக பெற்றுள்ளனர்.

விருதுக்கான பரிசுத் தொகையாக 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (1 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ரொக்கத் தொகையை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

செயற்கை நுண்ணறிவை வெற்றிகரமாகப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட அனைத்து அறியப்பட்ட புரதங்களின் கட்டமைப்பை மீதான கண்காணிப்புக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *