மொட்டு கட்சி சார்பில் யாழில் களமிறங்குகிறார் கீதாநாத் காசிலிங்கம்

  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு  உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் காசிலிங்கம் போட்டியிடவுள்ளார்.

வேட்பு மனுக்களில் கையொப்பமிடும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உடனிருந்தார்.

கீதாநாத் காசிலிங்கம், மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றினார்.

அவர் SLPP யில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்தை வழிநடத்த உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *