யாழில் தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு..!

யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக இப் புதிய கட்சி போட்டியிடவுள்ளது.

இதில் தமிழரசுக் கட்சியில் அதிருப்பியடைந்துள்ளவர்கள் மற்றும் வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரையும் உள்ளடக்கி இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனுவை நாளை காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

இக் கட்சியின் உருவாக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதன் தலைவரான ஐனாதிபதி சட்டத்தரணி தவராசா இன்றைய ஊடக சந்திப்பில் இதனை  அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *