ரியாத் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் உடன் தரையிறக்கம்! வெளியான காரணம்

 

  

கொழும்பில் இருந்து ரியாத் நோக்கிச் சென்ற UL 265 என்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீள் தரையிரக்கப்பட்டுள்ளது. 

நேற்று மாலை 7.00 மணியளவில் விமானம் எந்த அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

விமானம், பயணத்தை தொடங்கி, நடுவானில் சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்புக்கு மீண்டும் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அடுத்த விமானத்திற்கு மீண்டும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *