உயர்வடைந்த ஆறுகளின் நீர் மட்டம் – பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக களு மற்றும் வளவ கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எஹலியகொடை, இரத்தினபுரி, இறக்குவானை,  பெல்மதுளை, புவாக்பிட்டிய ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-அல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *