குடியிருப்பதற்கு காணி வேண்டும் – செட்டிக்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்..!

வவுனியா, செட்டிக்குளம், மெனிக்பாம் பிரதேச மக்கள் இன்று(11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செட்டிக்குளம், மெனிக்பாம் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டு நீண்டகாலமாக வசித்துவரும் உபகுடும்பங்களே இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் பிரதேசத்தில் வாழும் 70க்கும் மேற்பட்ட உப குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கான காணி வேண்டும் என கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 8 வருடங்களுக்கு மேலாக உறவினர்கள் வீடுகளில் வசித்து வரும் இவர்களுக்கு  காணி தருவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ள போதும் இதுவரை தரவில்லை என இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply