
ஏவுகணை சத்தத்தையும், கண்ணீரையும், ரத்தம் வழியும் காயங்களையும், பிணங்களையும் தினம் தினம் பார்த்துவரும் காஸா மக்கள் உளவியல் ரீதியாக அடைந்துள்ள பாதிப்பு நம் கற்பனைக்கு எட்டாதது. இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இந்த அவலத்தின் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும்… தெரியாது.