2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான சர்வஜன பலய பாராளுமன்ற வேட்பாளர்களின் விசேட கூட்டம்!

தொழில் முனைவர் மற்றும் கட்சித் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் வஸ்கடுவ சிட்ரஸ் ஹோட்டல் வளாகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தலில் நிலையான, பொறுப்பான மற்றும் நியாயமான தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்க அனைத்து வேட்பாளர்களையும் உணர்த்தும் நோக்கத்துடனே இக்கூட்டம் நடாத்தப்பட்டதாக கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

மேலும்‌ இக்கூட்டத்திற்கு, கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, தவிசாளர் ரொஷான் ரணசிங்க, தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம, உப தலைவர் சன்ன ஜயசுமண, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில உள்ளிட்ட மாவட்ட தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *